எப்படிச்சிரிக்க ?
இழி சாதிய சாயம் கொண்டு, எம் முகத்தினை முலாமிடும் பொழுது !
எப்படி நடக்க ?
முட்டுகட்டைகள் முழங்கால்களைப்பேர்த்தெம்மை
முடமாக்க முயலும் பொழுது !
எப்படி கிடக்க ?
தலைமுறை தலைமுறையாய் தரம்தாழ்த்திய சிந்தை
எம் தலையணையை தனளிடும் பொழுது !
களைந்திடவேமுடியாதெனினும்
கடைந்தறிந்து கடந்திட எண்ணுகிறேன்
இச்சமூகச் சாக்கடையை !!!....
No comments:
Post a Comment